follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுபாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

Published on

அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக 25 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சி பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கோட்டாகோகமயில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறை தாக்குதலும் தாக்குதல் நடத்தப்பட்ட விதமும் ஜனநாயகத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச சமூகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை,  இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும் என தெரிவித்துள்ள  லக்ஷ்மன் கிரியெல்ல,  எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...