follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபோராட்டத்திற்கு முன்னரை விட தற்போதுள்ள நிலை மிக மோசமானது! - சஜித்

போராட்டத்திற்கு முன்னரை விட தற்போதுள்ள நிலை மிக மோசமானது! – சஜித்

Published on

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்ப முடிந்திருந்தாலும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலையானது முன்னைய நிலையை விட மோசமானது என்று எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தேசிய சபை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புகள், வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தேசிய சபைக்கு கொண்டு வரப்படும் முற்போக்கான முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...