follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுநாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை – அஜித் நிவார்ட் கப்ரால்

நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை – அஜித் நிவார்ட் கப்ரால்

Published on

தமக்கு நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்மீது நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாகவும் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமை குறித்த பயணத்தடையினை எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவினால் விசாரனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

 

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...