follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுயுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் பொருளாதாரத்தில் வளர்ச்சிபெற முடியவில்லை – மைத்திரி

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரும் பொருளாதாரத்தில் வளர்ச்சிபெற முடியவில்லை – மைத்திரி

Published on

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது அவ்வாறு நடைபெறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய அவர், நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, நேற்று பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஆரம்பமானது.

28 நாடுகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக உரையாற்றினார்.

இலங்கை எதிர்நோக்கிவரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச ஒத்துழைப்பும் சகோதரத்துவமும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மோசடி, ஊழல் குறைக்காமல் சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி விடயங்களை நிலைநாட்டாமல் நெருக்கடியை நோக்கிச் சென்ற நாட்டிற்கு இலங்கையே உதாரணம் என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...