follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபோராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு – விசாரணைகள் ஆரம்பம்!

போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு – விசாரணைகள் ஆரம்பம்!

Published on

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்று, காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆரம்பம் முதலே உணவு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹோட்டலில் இருந்து நாளொன்றுக்கு 500 முதல் 600 வரையான உணவுப் பொட்டலங்களை போராட்டக்காரர்கள் பெற்றுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து அண்மைக்காலம் வரை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த உணவுப் பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்பட்டதா அல்லது ஏதேனும் அமைப்பினால் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...