follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

Published on

ஜூலை மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது  ஜனாதிபதி செயலகத்திற்குள் முதன் முதலாக அத்துமீறி நுழைந்த நபர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது  கோட்டையில் அமைந்துள்ள  ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் 38 வயதுடைய பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது கத்தியை கொண்டு பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தரை அச்சுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் போராட்டகாரர்கள் செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு  பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...