follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்காஸா நகர்மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்!

காஸா நகர்மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்!

Published on

பாலஸ்தீனத்தின் காசா நகர பகுதிகள் மீது நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தையும், 23 வயது யுவதியொருவரும் அடங்குவதாக பலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதலில் குறைந்தது 15 போராளிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த தாக்குதலை முறியடிக்க பயங்கரவாதிகள் தங்கி இருந்த பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் தற்போது பிரதமராக உள்ள யாயிர் லபிட் தனது பலத்தை நிரூபிக்க இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

சும்மா இருக்கும் போட்டி – பரிசு வழங்கும் தென்கொரிய அரசு

தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த போட்டியில் அந்த...