follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅரசாங்கம் சிறைகளை இளைஞர்களால் நிரப்ப முயல்கிறதா?

அரசாங்கம் சிறைகளை இளைஞர்களால் நிரப்ப முயல்கிறதா?

Published on

இந்நாட்டில் பொது மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களை வேட்டையாடும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கோட்டா கோகமவில் நிர்மாணிக்கப்பட்ட நூலகத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்து விசாரிக்கவும் அரசாங்கம் முயற்சித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பன்னிரெண்டாம் திகதி சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் இந்நாட்டின் சிறைச்சாலைகளை இளைஞர்களால் நிரப்ப செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த அடக்குமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த அடக்குமுறையையும் அரச மிலேச்சத்தனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மர்மமான முறையில் இளைஞர்கள் காணாமல் போவதன் பின்னணியில் உள்ள இயக்கி யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டத்தை உடனடியாக இரத்து செய்து நாட்டை சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச அடக்குமுறையை நிறுத்துமாறும் அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறும் கோரி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (09) பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வகட்சி நாட்டை கட்டியெழுப்பும் ஒன்றிணைந்த கூட்டு வேலைத்திட்டத்திற்காக பாராளுமன்றத்தில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள செயற்குழு முறைமையை ஸ்தாபிப்பதற்காக அரசாங்கத்திடம் முன்மொழிவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...