follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஆளுனர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை

ஆளுனர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை

Published on

மாகாண நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி செயன்முறைகளை ஒழுங்கான முறையில் பேணுதல் மற்றும் மாகாண சபையின் செலவினங்களை நிர்வகித்தல் போன்ற பொறுப்பு ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சவாலான காலகட்டத்தில் பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதன் மூலம் பொதுச் சேவைகளை உகந்த மட்டத்தில் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகளை இனங்கண்டு கொள்வதிலும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி அலுவலகத்துடனும் ஆளுனர்கள் நல்ல ஒருங்கிணைப்பை பேண வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறையாவது தமது மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் மாகாண சபையின் ஊடாக அமுல்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் வழமையான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறும் மாகாண ஆளுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான காலப்பகுதியில் தேசிய இலக்குகளை அடைவதற்கு ஆளுநர்களின் பங்களிப்பு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தி வருவதாகவும் குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...