follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசனிக்கிழமை முதல் பதுளைக்கு புதிய சொகுசு ரயில்

சனிக்கிழமை முதல் பதுளைக்கு புதிய சொகுசு ரயில்

Published on

கொழும்பு மற்றும் பதுளைக்கான நகரங்களுக்கு இடையிலான அரை சொகுசு தொடருந்து சேவை ஒன்று எதிர்வரும் வார இறுதி முதல் போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் ஆலோசனைக்கமைய இந்த தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி பிரதி சனிக்கிழமைகளில் காலை 5.30க்கு கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்படவுள்ளது.

கம்பஹா, வெயங்கொடை, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய தொடருந்து நிலையங்களில் குறித்த தொடருந்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பதுளையில் இருந்து முற்பகல் 9.50 அளவில் கொழும்பு – கோட்டைதொடருந்து நிலையத்தை நோக்கி பயணிக்கவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...