follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடு40 பேரை தேடும் பொலிஸார்!

40 பேரை தேடும் பொலிஸார்!

Published on

ஜூலை 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 40 பேரை அடையாளம் காண்பதற்காக, பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் 40 பேரின் மற்றுமொரு புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய கொழும்பு மத்திய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை அடையாளம் காணப்படாத சந்தேக நபர்களின் புகைப்படங்கள் சமூக ஊடக தளங்கள் மற்றும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் மூலம் பெறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த புகைப்படங்களில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 071-8591559, 071-8085585, 011-2391358, அல்லது 1997 (Hotline) ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும்,முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் பல புகைப்படங்களை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...