follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நிதி

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நிதி

Published on

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினால் வழங்கப்பட்ட மூன்றரை கோடி ரூபா பணத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக
கொழும்பு மறைமாவட்ட பங்கின் ஊடகப் பணிப்பாளர் அருட்தந்தை கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி கலாநிதி பிரையன் உடைக்வா ஆண்டகையின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டனை வத்திக்கானுக்கு சென்றிருந்தபோது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு பரிசுத்த பாப்பரசரினால் ஒரு இலட்சம் யூரோக்கள் வழங்கப்பட்டதாக அருட்தந்தை கூறினார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கும் இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளதாக அருட்தந்தை கிருஷாந்த பெர்னாண்டோ கூறினார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கடந்த ஏப்ரல் மாதத்தில் வத்திகான் புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...