follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுதேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசேட அறிக்கை

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசேட அறிக்கை

Published on

தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையின் பிரகாரம் இலங்கை பொது கடனின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளது.

2018-2022ஆம் ஆண்டுக்கான நிதி முகாமைத்துவம் மற்றும் பொது கடன் கட்டுப்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

டிசம்பர் 31, 2019ஆம் திகதி வரை காணப்பட்ட மொத்த 86.8 வீத பொது கடன், கடந்த 2 ஆண்டுகளில் 17.8 வீத வலுவான வளர்ச்சியைக் காண்பிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து, கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களால் கடன் மதிப்பீடுகளை படிப்படியாகக் குறைப்பது தொடர்பான நிலைமையைத் தணிப்பதற்கு மத்திய வங்கி அல்லது நிதி அமைச்சு போதுமான அக்கறை எடுக்கவில்லை அல்லது போதுமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.

இலங்கையில் தனிநபர் கடனின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் 257 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....