follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஅரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

Published on

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் பொது செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் கருத்துக்களை கேட்டறிவதற்கும் எதிர்ப்பை வௌியிட்டுள்ள அரசியல் கட்சிகளின் யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் எதிர்காலத்தில் குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்குமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத சுமார் 50 அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன.

தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...