follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகோட்டாபய தங்கியிருந்த சிங்கப்பூர் விடுதிக்கான கட்டணம் 67 மில்லியன் ரூபா?

கோட்டாபய தங்கியிருந்த சிங்கப்பூர் விடுதிக்கான கட்டணம் 67 மில்லியன் ரூபா?

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக செலவிடப்பட்ட 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, எவ்வாறாயினும், தற்போது தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் பேங்காக் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...