follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுபல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

Published on

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிவேரிய பிரதேசத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணையின் போது, நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல திருட்டு சம்பவங்களுடன் சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, மேலும் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா-எல, பியகம, கடவத்தை, களனி, யக்கல, மஹபாகே, பேலியகொடை, மீகஹவத்தை, ராகம மற்றும் வெலிவேரிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடனும் குறித்த சந்தேகநபர்களுக்கு தொடர்புள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் வசமிருந்த 2 முச்சக்கர வண்டிகள், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 11 சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...