follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு8 மீனவர்கள் கைது

8 மீனவர்கள் கைது

Published on

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 6 படகும் 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை அதிகரித்திருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட அணியும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளும் கடற்படையும் இணைந்து நேற்று (15) இரவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதன்போது முல்லைத்தீவு கடலில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஒன்றான கடலுக்குள் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் கடற்பரப்பில் மூன்று படகுகளும், மாத்தளன் கடற்பரப்பில் ஒரு படகும், வலைஞர்மடம் கடற்பகுதியில் இரண்டு படகுகளும் என மொத்தமாக 6 படகுகளுடன் 8 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...