follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுமீனவர்கள், விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்க சலுகை திட்டம்

மீனவர்கள், விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் வழங்க சலுகை திட்டம்

Published on

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான மண்ணெண்ணெயை பெற்றுக் கொடுப்பதற்காக, சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் மண்ணெண்ணெயை பெற்றுக் கொள்வதில் சலுகை வசதி கிடைக்குமென அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்(21) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 340 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் பல்வேறு தரப்பினரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

இலங்கையில், மாதாந்தம் 19 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய்க்கான தேவை காணப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கான மண்ணெண்ணெய் தேவையானது, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் கிளைச் சேவையாக பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...