follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவசந்த முதலிகே உள்ளிட்ட மூவரிடம் CID விசாரணை

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரிடம் CID விசாரணை

Published on

90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசத்துரோக சதிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தெரியவந்தால், அவர்கள் மூவரையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) அனுமதி வழங்கியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...