follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅனுமதிபெறாத வணிகங்களுக்கு எரிபொருள் இல்லை

அனுமதிபெறாத வணிகங்களுக்கு எரிபொருள் இல்லை

Published on

2100 க்கு அதிகமான வணிகங்கள் தங்களுக்கென சொந்த எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை அமைத்துள்ளதாகவும் மற்றும் பலவற்றை அனுமதியின்றியும் அமைத்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உரிமம் இல்லாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிகங்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை விநியோகிக்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், 1250க்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், அத்தியாவசிய நுகர்வோருக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏற்றுமதி வணிகங்கள் எரிபொருளுகான கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் செலுத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வணிக நிறுவனங்களுக்கு பெற்றோல் வழங்கப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...