follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமே 09 தாக்குதல் : பெண் ஒருவருக்கு விளக்கமறியல்!

மே 09 தாக்குதல் : பெண் ஒருவருக்கு விளக்கமறியல்!

Published on

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களை கொம்பனித்தெருவில் பேர வாவிக்குள் தள்ளிவிட்டதாகக் கூறப்படும் பெண்ணை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பியவர்களை, பேர வாவிக்குள் தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர் தொடர்பான அடையாள அணிவகுப்பு இன்று நடைபெறவிருந்த நிலையில், சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அந்த நடவடிக்கை பிற்போடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...