follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுசர்வதேச இளைஞர் கவுன்சிலின் புதிய தலைவராக நியமனம்பெற்ற இலங்கையர்!

சர்வதேச இளைஞர் கவுன்சிலின் புதிய தலைவராக நியமனம்பெற்ற இலங்கையர்!

Published on

சர்வதேச இளைஞர் கவுன்சில் புதிய தலைமை நிர்வாகியை நியமித்துள்ளது. சர்வதேச இளைஞர் கவுன்சில் (IYC) என்பது இளைஞர்களிடையே நிறுவப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும். 2007 இல் ஐக்கிய நாடுகள் சபையில் UN ECOSOC இல் சிறப்பு ஆலோசனை அந்தஸ்தும் பெற்றுள்ளது.
இவ்வமைப்பானது UN உறுப்பு நாடுகளிலுள்ள இளைஞர்கள் மற்றும் வக்கீல்களுக்கான நிலையான இளைஞர் மேம்பாடு தொடர்பான தளத்தை தொடர்ந்து வழங்கி வருகின்றது.

இலங்கையரான திரு. சதாம் திக்ரன் சாஜஹான், செப்டம்பர் 2, 2022 முதல் சர்வதேச இளைஞர் கவுன்சில் தலைமையகத்தை தலைமை நிர்வாக இயக்குனராக வழிநடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் பல சர்வேதேச இளைஞர் அமைப்புகளை வழிநடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

சர்வதேச இளைஞர் பேரவையின் இலங்கையின் தலைவராக 2012 இல் IYC இல் இணைந்தார்.
2013 இல் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த இளைஞர் பேரவை உட்பட பல இளைஞர் மன்றங்களுக்கான இலங்கை இளைஞர் தூதுவராகப் பிரதிநிதித்துவம் செய்துள்ளார். மேலும் இக்காலத்தில் IYC இன் செயற்பாடுகளை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கு இவர் பல உத்திகளையும் வகுத்துள்ளார்.

இது தொடர்பாக IYC இனால் வெளியிடப்பட்ட அறிக்கை

IYC appoints new head – Media Notice

 

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...