follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபாகிஸ்தானுக்கு ஆறுதல் கூறினார் ரணில்!

பாகிஸ்தானுக்கு ஆறுதல் கூறினார் ரணில்!

Published on

பாகிஸ்தானில் கடும் மழையினால் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  அந்நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபிடம் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக மனித உயிர்கள், கால்நடைகள் மற்றும் பல சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...