follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு நிரந்தர அலுவலகம் அமைக்க திட்டம்!

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நிரந்தர அலுவலகம் அமைக்க திட்டம்!

Published on

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான முழுமையான நிரந்தர அலுவலகக் கட்டடத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் 78 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைவாக 175 பேர்ச் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரச நிதி பயன்படுத்தப்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.

மேலும் யுத்தத்த காலத்தின் போது உயிரிழந்தவர்கள், மாற்றுத்திறனாளி போர் வீரர்கள் மற்றும் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக அவர்கள் ஆற்றிய உன்னத சேவைகளையும் பாதுகாப்புச் செயலாளர் நினைவு கூர்ந்தமை குறிப்பிடதக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...