follow the truth

follow the truth

June, 28, 2025
Homeஉள்நாடுஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று பாராளுமன்றத்தில் - சபாநாயகர்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று பாராளுமன்றத்தில் – சபாநாயகர்

Published on

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தமக்கு ஏற்கனவே கிடைத்துள்ளதாக சபாநாயகர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார்.

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து பல தரப்பினர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர், மனுக்களின் விசாரணையை நிறைவு செய்த நீதிபதிகள் குழு, அதன் தீர்ப்பை ஆகஸ்ட் 23 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைத்திருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது...

டோக்கன் பெறுவது தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள்...

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று...