follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஜெனிவாவிற்கு விஜயம் செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் !

ஜெனிவாவிற்கு விஜயம் செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் !

Published on

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விஜயம் செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், கலாநிதி காவிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி எரந்த வெலியங்கே ஆகியோரே ஜெனீவாவுக்கு சென்றுள்ளனர்.

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை கவலையடைவதாக காவிந்த எம்.பி தெரிவித்தார்.

இதேவேளை, நாளையதினம் (12) ஆரம்பமாகவுள்ள பேரவையின் 51ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்கு  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு ஏற்கெனவே ஜெனீவா சென்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சருடன் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ விஜயம் செய்துள்ளதுடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெடரிகோ வில்லேகாஸை இருவரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...