follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுசர்வதேச பொறிமுறை அவசியம்! – உலக தமிழர் பேரவை

சர்வதேச பொறிமுறை அவசியம்! – உலக தமிழர் பேரவை

Published on

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கும், பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்குவதற்கும் ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தவுள்ளதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை மீறியமைக்கான விசாரணை, சாட்சியங்களை சேகரித்தல், பொறுப்புக்கூறல், நீதி வழங்குதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், உள்ளுர் பொறிமுறை என கூறி பாதிக்கப்பட்டவர்களை மற்றும் சர்வதேச சமூகத்தை அரசாங்கங்கள் முட்டாளாக்கியுள்ளன என்றும் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.

எனவே புதிய தீர்மானம், நிலைமாறுகால நீதியின் ஒரு பகுதியாக, இதேபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் மற்றும் உள்நாட்டு உள்நாட்டுப் போரில் விளைந்த பிரச்சினைகளின் மூல காரணங்களுக்கான அரசியல் தீர்வைக் கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பை அர்த்தப்படுத்த வேண்டும் என்றும் மாகாணங்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” – நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பணிப்புரை

நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம்...

ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும்

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ஊழல்...

மழையுடனான காலநிலை – ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. களு கங்கை மற்றும் வளவ கங்கை...