follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதெமட்டகொடை அடுக்குமாடி குடியிருப்பில் பொலிஸார் அவசர சோதனை!

தெமட்டகொடை அடுக்குமாடி குடியிருப்பில் பொலிஸார் அவசர சோதனை!

Published on

தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட அவசர தேடுதல் நடவடிக்கையில் பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நடவடிக்கையில் 35 கிராம் ஹெரோயின், 100 மாத்திரைகள் மற்றும் ஐந்து வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அளுத்கடை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...