follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஅரிசி இறக்குமதியை குறைக்க நடவடிக்கை

அரிசி இறக்குமதியை குறைக்க நடவடிக்கை

Published on

சிறு போகத்தில் எதிர்பார்க்கப்படும் மிதமான அறுவடையைத் தொடர்ந்து அரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சிறு போகத்தில் நல்ல அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் பெரும் போகத்திற்கான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, கடந்த சில மாதங்களாக ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியுடன் நாட்டிற்கான அரிசி இறக்குமதியை படிப்படியாக குறைத்து வருகிறோம் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரான ரமேஷ் பத்திரன நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை 230,000 தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஒரு கிலோ நெல்லுக்கு 100 ரூபாய்க்கு மேல் வாங்குவதால், நுகர்வோர் மீது அதிக சுமையை ஏற்படுத்தாமல், விவசாயிகளின் அறுவடைக்கு தகுந்த விலையை வழங்குவது மிகவும் முக்கியமானது என ரமேஷ் பத்திரன வலியுறுத்தியுள்ளார்.

சந்தையில் போதுமான அளவு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு இருப்பதால், இறக்குமதியால் அரிசியின் சந்தை விலை குறையும், விவசாயிகளின் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காமல் போகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் உரம் தட்டுப்பாடு காரணமாக விளைச்சல் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐ.ம.சக்தியின் சுசில் குமாரவின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார...

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான...