follow the truth

follow the truth

June, 13, 2025
Homeஉள்நாடுகிரான்குளம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கிரான்குளம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Published on

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று(14) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கிரான்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிரான்குளம் பகுதியை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்ற நபர் வீட்டிற்கு திரும்பாத நிலையில், நேற்று காட்டுப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் 17 முதல் 20 வரை கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளமையினால் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளின்...

திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறையில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா...