follow the truth

follow the truth

June, 14, 2025
HomeTOP2பாராளுமன்றம் 17 முதல் 20 வரை கூடவுள்ளது

பாராளுமன்றம் 17 முதல் 20 வரை கூடவுள்ளது

Published on

பாராளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் இந்த ஒவ்வொரு தினத்திலும் மு.ப. 9.30 முதல் மு.ப. 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள (1) முதல் (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜூன் 17 ஆம் திகதி மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை 2430/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில்

ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின்...

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (13) பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின்...

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையேயான பதற்ற நிலை – இலங்கையின் கோரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளது. இரு நாடுகளும் நிதானத்தைக்...