follow the truth

follow the truth

June, 12, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் திருட்டு : அம்பேவல தொழிற்சாலை ஊழியர்களிடம் விசாரணை!

எரிபொருள் திருட்டு : அம்பேவல தொழிற்சாலை ஊழியர்களிடம் விசாரணை!

Published on

அம்பேவெல , மில்கோ தொழிற்சாலைக்காக கொள்வனவு செய்யப்பட்ட 45,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளை தனியார் நிரப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் அம்பேவெல மில்கோ தொழிற்சாலையின் ஊழியர்கள் குழு தொடர்பில் மில்கோ (பிரைவேட்) லிமிடெட் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அம்பேவெல மில்கோ தொழிற்சாலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளை 2021 ஆம் ஆண்டிலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் குழுவைப் பற்றி தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மில்கோ தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப தேவையான நடவடிக்கை எடுப்போம் என ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிற்சாலையில் உள்ள ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக வாங்கப்பட்ட 45,000 லீற்றர் எரிபொருளை குறிப்பாக டீசல் விற்பனை செய்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னரே இவ்வாறு எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தச் சம்பவம் தொடர்பாக நான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்திருந்தேன், இந்த வருடமும் இது நடந்ததா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் எனக்கு அறிவுறுத்தினார். அதன்படி, வரும் நாட்களில் இது குறித்து பொலிஸில் புகார் அளிக்க உள்ளேன். மேலும், பவுசர்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) விசாரணை நடத்தும்” என மில்கோ தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதி ஒருவரை...

ஆவணங்களை சோதனையிட CID குழுக்கள் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைப்பு

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 28 குழுக்கள் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளுக்கும்...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...