follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் திருட்டு : அம்பேவல தொழிற்சாலை ஊழியர்களிடம் விசாரணை!

எரிபொருள் திருட்டு : அம்பேவல தொழிற்சாலை ஊழியர்களிடம் விசாரணை!

Published on

அம்பேவெல , மில்கோ தொழிற்சாலைக்காக கொள்வனவு செய்யப்பட்ட 45,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளை தனியார் நிரப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் அம்பேவெல மில்கோ தொழிற்சாலையின் ஊழியர்கள் குழு தொடர்பில் மில்கோ (பிரைவேட்) லிமிடெட் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அம்பேவெல மில்கோ தொழிற்சாலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளை 2021 ஆம் ஆண்டிலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் குழுவைப் பற்றி தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மில்கோ தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப தேவையான நடவடிக்கை எடுப்போம் என ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிற்சாலையில் உள்ள ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக வாங்கப்பட்ட 45,000 லீற்றர் எரிபொருளை குறிப்பாக டீசல் விற்பனை செய்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னரே இவ்வாறு எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தச் சம்பவம் தொடர்பாக நான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்திருந்தேன், இந்த வருடமும் இது நடந்ததா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் எனக்கு அறிவுறுத்தினார். அதன்படி, வரும் நாட்களில் இது குறித்து பொலிஸில் புகார் அளிக்க உள்ளேன். மேலும், பவுசர்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) விசாரணை நடத்தும்” என மில்கோ தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...