மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்குமாறு பொதுஜன பெரமுனவின் நிர்வாக சபை கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வாக்களிக்கச் சென்றால் தோல்வியடையக் கூடும் என்ற முன்முடிவின் காரணமாகவே இவ்வாறான கோரிக்கையை இவர்கள் முன்வைத்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்திடம் டெய்லி சிலோன் செய்திப் பிரிவு வினவிய போது, நிர்வாக சபையில் மேயர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் இரண்டு கருத்துக்களை முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
நகர்ப்புற மேயர்கள், தலைவர்கள் வாக்களிப்பை ஒத்திவைக்குமாறு கூறியதாகவும், கிராமப்புற மேயர்களும், தலைவர்களும் வெற்றி பெற முடியும் என்பதால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறிய அவர், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட கருத்து என்றார்.