follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபுதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம்!

புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம்!

Published on

புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கசினோ சூதாட்டத்தை சட்ட ரீதியானதாக மாற்றுதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல், புதிய அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கசினோ வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு இரண்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே தற்பொழுது அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு 17ஆம் இலக்க கசினோ வியாபாரம் குறித்த சட்டத்தின் பிரகாரம் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படாத காரணத்தினால் இதுவரையில் குறித்த சட்டத்தின் கீழ் எந்தவொரு நிறுவனத்திற்கும் அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய கசினோ நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கசினோ வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களிடமிருந்து முறையாக வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...