follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉள்நாடுவசந்த முதலிகேயின் மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

வசந்த முதலிகேயின் மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

Published on

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்கள செயற்பாட்டாளர்களான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர்- வசந்த முதலிகே உட்பட்ட மூவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் திகதியை அறிவித்துள்ளது.

மேலும், பிரியநாத ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்டன.

இதன்போது, குறித்த அடிப்படை உரிமைமீறல் மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய்...

தேர்தல் ஆணையத்தின் விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 40 பேரின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று...

கெஹெலிய நீதிமன்றுக்கு

"ஊழல் குற்றத்தைச் செய்ததாக" சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது...