follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉள்நாடுநாளை ஜப்பான் புறப்படும் ஜனாதிபதி!

நாளை ஜப்பான் புறப்படும் ஜனாதிபதி!

Published on

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் செல்லவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார்.

ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் அடுத்த வாரம் இடம்பெறும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய நீதிமன்றுக்கு

"ஊழல் குற்றத்தைச் செய்ததாக" சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்க STF குழுக்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 15 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. அதன் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்,