follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுமத ஸ்தலங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவது குறித்து கலந்துரையாடல்

மத ஸ்தலங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவது குறித்து கலந்துரையாடல்

Published on

மத ஸ்தலங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவது தொடர்பாக மின்சார சபைக்கும் புத்தசாசன அமைச்சுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

புதிய மின் கட்டண திருத்தத்துடன் மத ஸ்தலங்களில் அதிகளவிலான மின்சார கட்டணம் அதிகரிப்பதாக புத்தசாசன அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில சமய ஸ்தலங்கள் நிரம்பி வழியும் சந்தர்ப்பங்களிலும் அதிகளவான பிக்குகள் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் மின்சார பாவனை ஒப்பீட்டளவில் அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆலயங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் நிலவும் மின் கட்டணப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹரகம ஸ்ரீ சந்திரஜோதி ஆலயத்தின் 50ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ‘iPhone’ சமாச்சாரம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவு அறிக்கைகள் மற்றும் இரகசியத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், இதன் காரணமாக, புதிய...