follow the truth

follow the truth

May, 18, 2025
Homeஉள்நாடுஇடம்பெயர்ந்த கஜீமா தோட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்!

இடம்பெயர்ந்த கஜீமா தோட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்!

Published on

கொழும்பு – பாலத்துறை கஜீமா தோட்டத்தில் பரவிய தீயினால் இடம்பெயர்ந்துள்ள 300 பேருக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த மக்களுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குடியிருப்பு தொகுதிகளில் இருந்து வீடுகளை வழங்குவதற்கான முன்மொழிவொன்று இன்று(28) மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – பாலத்துறை கஜீமா தோட்ட மாடி குடியிருப்பில் நேற்றிரவு  மணியளவில் பரவிய தீயினால் 80 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்களால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக இன்று  இரசாயன பகுப்பாய்வொன்று நடத்தப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...