follow the truth

follow the truth

May, 1, 2025
HomeUncategorizedபார்வையற்றோர் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் அதிகரிப்பு!

பார்வையற்றோர் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் அதிகரிப்பு!

Published on

நாட்டில் பார்வையற்றோர் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் பார்வையற்றோருக்கான தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான பிரசன்ன விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பார்வையற்றோர்  பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரத்தின் விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 லட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது .

பார்வையற்ற குழந்தைகள் கல்விக்காகப் பயன்படுத்தும் பலகையின் விலை சுமார் 300 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது.

அத்தோடு அவற்றுக்கு தட்டுப்பாடும் நிலவுகின்றது . விசேட தொழில்நுட்ப முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒலிப் புத்தகங்களைக் கேட்கும் தொழில்நுட்ப சாதனத்தின் விலை 22 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது என்றார் .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...

முதல் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப்...