follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்!

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்!

Published on

இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் இன்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவருடனான சந்திப்பின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவை ஜனாதிபதி இன்று சந்தித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கிய நிதி உதவிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டிற்கும் வங்கிக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்.

ஜனாதிபதிக்கு பதிலளித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா, இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவதாக உறுதியளித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...