follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுசீனாவின் எண்ணெய் விநியோக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை!

சீனாவின் எண்ணெய் விநியோக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை!

Published on

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கும் சீனாவின் பெட்ரோ சைனா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள், மீள செலுத்தும் முறைமைகள் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சர் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பெட்ரோ சைனா அதிக அளவில் எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதுடன், 10 ஆண்டுகளாக சிறந்த புரிந்துணர்வை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், வெளிநாட்டு எண்ணெய் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளதாக நம்பப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி...

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கட்சி,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என...