follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசுற்றுலா பயணிகளுக்கு புதிய எரிபொருள் அனுமதி அட்டை

சுற்றுலா பயணிகளுக்கு புதிய எரிபொருள் அனுமதி அட்டை

Published on

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரபல தொலைத்தொடர்பு பங்காளியும் எரிசக்தி அமைச்சருமான காஞ்சனா விஜேசேகரவின் ஒத்துழைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கான ‘Tap & Go’ Fuel Pass அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.

சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் திட்டமும் வழங்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு உரித்துடையவர்கள் கட்டாயம் சுற்றுலா சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் இலங்கை தொடர்பான சாதகமான தகவல்களை பரப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...