follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதயாசிரி ஜயசேகரவிற்கு இலங்கை மின்சார சபை கடிதம்

தயாசிரி ஜயசேகரவிற்கு இலங்கை மின்சார சபை கடிதம்

Published on

நிலுவை மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  தயாசிரி ஜயசேகரவிற்கு இலங்கை மின்சார சபை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குரிய 6 இலட்சத்து 37 ஆயிரத்து  448 ரூபாய் நிலுவை மின் கட்டணத்தை செலுத்துமாறே மின்சார சபை அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் ஹேமந்த ரணசிங்கவின் கையொப்பம் மற்றும் உத்தியோகப்பூர்வ இறப்பர் முத்திரையும் குறித்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிலுவை மின் கட்டணத்தினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர குறித்த வீட்டினை கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய பெயரிற்கு பதிவு செய்துக்கொண்டுள்ளார் என்பதோடு, அப்போது 4 இலட்சத்து 94 ஆயிரத்து 739 ரூபாய் மின் கட்டணம் நிலுகையாக செலுத்தப்படாமலிருந்ததாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதி வரை நாடாளுமன்ற உறுப்பினர் தயாரிசி ஜயசேகரவின் பெயரில் பதிவாகியுள்ள கொழும்பில் 07 இல் அமந்துள்ள வீட்டிற்கு 637,448,38 சதம் மின்கட்டணம் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வழங்கப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் மின் கட்டணத்தை செலுத்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர தவறும் பட்சத்தில் மின் இணைப்பினை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...