follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇரு வாரங்களில் வழமைக்கு திரும்பும் நுரைச்சோலை!

இரு வாரங்களில் வழமைக்கு திரும்பும் நுரைச்சோலை!

Published on

திருத்தப் பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் தலா 300 மெகாவோட் கொண்ட மூன்று அலகுகள் செயற்படுகின்றன.

அதன் இரண்டாவது அலகு திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதோடு முதலாம் மற்றும் மூன்றாம் அலகுகளின் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து தேசிய மின்கட்டமைப்புடன் 600 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் இரண்டு நிலக்கரி கப்பல்களுக்கான முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...