follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபோராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கைக்கு பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு கண்டனம்

போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கைக்கு பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு கண்டனம்

Published on

இலங்கையில் தற்போதைய ஆட்சியில் அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிரான வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாக பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு தாயும் குழந்தையும் பொலிஸாரினால் வன்முறையாக இழுத்துச் செல்லப்பட்டதை உலகம் திகிலுடன் கண்டதாக தெரிவித்துள்ளது.

நேற்றைய போராட்டத்தில் அரசின் நடவடிக்கைகள் நுட்பமானவை அல்ல என்றும் அப்பட்டமான ஜனநாயக விரோதமான ஒரு சர்வாதிகார ஆட்சியின் கடுமையான நினைவூட்டல் என்றும் அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளது.

அரசின் இத்தகைய சட்ட விரோதமான மிருகத்தனமான செயல்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...