follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Published on

காலி முகத்திடல் மைதானத்தில் திங்கட்கிழமை  நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கை பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.

சட்டத்தரணிகள் மற்றும் தொழில் உரிமைகள் இயக்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அமைதியான முறையில் ஒன்றுகூடுவது அடிப்படை உரிமை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் பல அரசியல் கட்சிகள் காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சமர்ப்பிப்புகளை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே, ஆர்ப்பாட்டத்தில் சட்டவிரோதமான அல்லது வன்முறையான எதுவும் இடம்பெறும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டார்.

மற்றவர்களின் உரிமைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் எந்தவொரு போராட்டத்திற்கும் இடையூறுகள் இல்லை என்று குறிப்பிட்ட நீதவான், வன்முறைச் செயல்கள் இடம்பெற்றால், அவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...