follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுஇலங்கை உள்ளிட்ட 54 வறிய நாடுகளுக்கு அவசரமாக கடன் நிவாரணம் தேவை - ஐ.நா

இலங்கை உள்ளிட்ட 54 வறிய நாடுகளுக்கு அவசரமாக கடன் நிவாரணம் தேவை – ஐ.நா

Published on

உலகளாவிய நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் மிக வறிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும்  இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு  கடன் நிவாரணம் மிகவும் அவசியத் தேவையாக உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா. இன்று  வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், டஜன் கணக்கான வளரும் நாடுகள் கடன் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் ‘The risks of inaction are dire’ என்றும் எச்சரித்துள்ளது.

வறிய, கடனாளி நாடுகள் ஒன்றிணைந்து வரும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன என்றும் மேலும் பலர் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது புதிய நிதியுதவியை அணுகவோ இயலாதுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மற்றும் பணச் சுருக்கம் மற்றும் குறைந்த வளர்ச்சி ஆகியவை உலகெங்கிலும் ஏற்ற இறக்கத்தை தூண்டுவதால் சந்தை நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன என்றும் ஐ.நா. வின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்றுநோயினால் நீண்ட காலத்திற்கு முன்பே பாதிக்கப்பட்ட பல நாடுகளில் கடன் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ நா. கூறியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த திசாநாயக்க நீதிமன்றுக்கு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின்...

இஸ்ரேலின் ஈரானிய தாக்குதல் – நடத்தப்பட்டிருக்கக் கூடாது – ரணில் [VIDEO]

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள Valdai Discussion Club கலந்துரையாடலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈரான்...

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார...