follow the truth

follow the truth

May, 14, 2025
Homeவிளையாட்டுமகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா!

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா!

Published on

2022ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய, மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை 07ஆவது முறையாகவும் இந்திய அணி வென்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய, இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக இனோகா ரணவீர 18 ஓட்டங்களையும், ஓசாதி ரணசிங்க 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை மகளிர் அணியின் ஏனைய வீராங்கனைகள் 10க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ரேனுகா சிங் 03 ஓவர்கள் பந்துவீசி 05 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 66 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 8.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக ஸ்மிருதி மந்தனா 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் இனோகா ரணவீர 03 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...