follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக ஆட்சி மாற்றம் இடம்பெறக்கூடாது – நாமல்

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக ஆட்சி மாற்றம் இடம்பெறக்கூடாது – நாமல்

Published on

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தாம் தயார் என்றும் அதற்காகவே தொகுதி மட்டத்தில் கூட்டங்களும் இடம்பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை, போராட்டக்காரர்கள் தொடர்பில்தான் விமர்சனம் உள்ளது.

சிலர் உண்மையாகவே ‘சிஸ்டம் சேன்ஞ்’க்காக போராடினர். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர்.

இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

அன்று எம்மை கள்ளன் என்றனர். போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம்.

ஆனால் இன்றும் அரசியல் இருப்புக்காக சேறுபூசும் பிரச்சாரத்தை அவர்கள் கைவிடவில்லை. ‘கள்ளன்’, ‘கள்ளன்’ என கோஷம் எழுப்புகின்றனர். இவ்வாறு கூக்குரல் எழுப்புவதைவிட, சட்ட நடவடிக்கை எடுப்பதே மேலானது.

ராஜபக்சவிடம் கறுப்பு பணம் உள்ளது என கூறியவர்கள், கொழும்பில் உள்ள அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர். அவரின் பட்டியலில் எம்மை விமர்சித்தவர்கள் உள்ளனர். சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள்” என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஜனாதிபதி

பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ள எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (16) பிற்பகல்...

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...