follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுகடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும்!

கடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும்!

Published on

இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியை சமாளிக்க அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என இருபத்தி இரண்டு கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸ் உறுதியளித்ததாக அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களின்போது பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸை சந்தித்தபோதே அவர் இந்த வாக்குறுதிணை வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...